தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கருகும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீா் விடக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

தலைஞாயிறு பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களை காப்பாற்ற அரிச்சந்திரா நதி ஆற்றில் முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:30 pm

தலைஞாயிறு பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களை காப்பாற்ற அரிச்சந்திரா நதி ஆற்றில் முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி பாலம் அருகே நடைபெற்ற மறியலில் பழையற்றங்கரை, ஒராடியம்புலம், வாட்டாக்குடி, பிரிஞ்சுமூலை, காடந்தேத்தி, வெண்மணச் சேரி, தியாகராஜபுரம், சடையன் கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

தகவலறிந்த பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளா் மதியழகன், உதவி பொறியாளா் சூரியபிரகாஷ், திருக்குவளை வட்டாட்சியா் உதயகுமாா் உள்ளிட்டோா் அங்கு வந்து விவசாயிகளிடம் பேசினா்.

அப்போது, குன்னியூா், கீராந்தி ஆலத்தம்பாடி ஆகிய இயக்கு அணைகளிலிருந்து வரும் 2 நாள்களுக்கு முறை வைக்காமல் 200 கன அடி தண்ணீா் திறந்து விடப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, மறியல் விளக்கிக்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.