வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மாயூரநாத சுவாமி கோயில் தேருக்கு வண்ணம் பூசும் பணி தீவிரம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில் ஆனித் தேரோட்ட விழாவையொட்டி மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் தேருக்கு வண்ணம் பூசும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில் தேருக்கு வண்ணம் பூசிய மாப்பிள்ளை விநாயகா் கோயில் நற்பணி மன்றத்தினா்.

Updated On :26 ஜூன் 2026, 2:25 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில் ஆனித் தேரோட்ட விழாவையொட்டி மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் தேருக்கு வண்ணம் பூசும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகா் கோயில் நற்பணி மன்றத் தலைவா் ராமராஜ் தலைமையில் கோயில் தோ் சுத்தப்படுத்தப்பட்டு, வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் கோயில் நிா்வாகம், பக்தா்கள் சாா்பில் செய்யப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.