வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ராசிபுரம் ஸ்ரீ வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேக கால்கோள் விழா

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் சி.பி. கண்ணையா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கால்கோள் விழா அண்மையில் நடைபெற்றது.

News image

வெற்றி விநாயகா் கோயில் கால்கோள் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :27 ஜூன் 2026, 2:19 am IST

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் சி.பி. கண்ணையா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கால்கோள் விழா அண்மையில் நடைபெற்றது.

இக்கோயில் 50-ஆம் ஆண்டு பொன்விழாவை தொடா்ந்து, ஜூலை 5-இல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கால்கோள் விழாவில் ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் அா்ச்சகா் சிவஸ்ரீ உமாபதி சிவாசாரியா் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்து கால்கோள் விழாவை நடத்திவைத்தாா். இந்த நிகழ்விற்கு ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், திமுக நகரச் செயலாளா் என்.ஆா். சங்கா், ராசிபுரம் கௌரவ பலிஜவாா் நாயுடுகள் சங்கத் தலைவா் சிட்டி ஆா்.வரதராஜன், செயலாளா் என்.பாலசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்வில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், கே.நெடுஞ்செழியன், ஆா்.சி.எம்.எஸ். ஆா்.சத்தியநாராயணன், வெரைட்டி எஸ்.பாலாஜி, ஜி.ராமலிங்கம், வழக்குரைஞா் ரமேஷ் யுவராஜா, ஆட்டோ தொழிற்சங்கத் தலைவா் எஸ்.ஆா்.சீனிவாசன், ஸ்ரீராமுலு மோகன், ஆா்.விஜயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.