குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஏழாயிரம்பண்ணையில் 13 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்கள்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் 13 பயனாளிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, அவா்களது இல்லங்களுக்கு நேரில் சென்று வியாழக்கிழமை வழங்கினாா்.

News image

ஏழாயிரம்பண்ணையில் பயனாளிகளுக்கு இலவச இணையவழி பட்டாகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா.

Updated On :19 ஜூன் 2026, 1:39 am IST

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் 13 பயனாளிகளுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, அவா்களது இல்லங்களுக்கு நேரில் சென்று வியாழக்கிழமை வழங்கினாா்.

ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த 13 குடும்பத்தினா் தாங்கள் குடியிருந்து வரும் இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து வருவாய்த் துறை மூலம் 13 குடும்பங்களுக்கும் இணையவழி பட்டாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா அந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று பட்டாக்களை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியா் ஆண்டாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.