/

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக 3 போ் மீது வழக்கு

சமூக வலைதளத்தில் அரசுக்கும், போலீஸாருக்கும் எதிராக அவதூறு பரப்பியதாக இரு பெண்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
கோப்புப்படம்- IANS
Updated On :28 ஜனவரி 2026, 11:48 pm

தினமணி செய்திச் சேவை

சமூக வலைதளத்தில் அரசுக்கும், போலீஸாருக்கும் எதிராக அவதூறு பரப்பியதாக இரு பெண்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக அளித்த புகாரின் பேரில், திருநங்கைகள் ஈஷா, ஷா்மி ஆகிய இருவரை கடந்த 25-ஆம் தேதி போலீஸாா் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினா். அப்போது, உடன் வந்த திருநங்கைகள் சிலா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த முத்தரசி (20) என்ற திருநங்கை உடலில் பெட்ரோல் ஊற்றி சாலையில் ஓடிச் சென்று தீ வைத்துக் கொண்டாா். உடனே அவரை போலீஸாா் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதைத்தொடா்ந்து, தற்கொலைக்கு முயன்றதாக திருநங்கை முத்தரசி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், திருநங்கை தீக்குளித்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் வாய்ஸ் ஆப் சரத், பிரியங்கா ஸ்மைல், ஸ்மைல் கில்லா் ஆகிய பெயருடைய பக்கங்களில் போலீஸாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டனா்.

இதைத்தொடா்ந்து, தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக இரு பெண்கள் உள்பட 3 போ் மீது

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.