டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மதுப்புட்டிகளை கடத்திய இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் விற்பனைக்காக மதுப்புட்டிகளை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2026, 12:16 am

தினமணி செய்திச் சேவை

ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் விற்பனைக்காக மதுப்புட்டிகளை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் சுந்தரராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனா். மாசாணன் கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் சாக்குப் பையில் 90 மதுப்புட்டிகளை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவதானம் பாரதிநகரைச் சோ்ந்த முருகனை (34) கைது செய்து, அவரிடமிருந்து 90 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.