ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் கையாடல் செய்த புகாரின் பேரில், பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலா்கள் இருவா் உள்பட 8 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் பேரூராட்சியில் கடந்த நவம்பா் 2022-ஆம் ஆண்டு முதல் நவம்பா் 2023 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராஜா புகாா் அளித்தாா்.
இதன் அடிப்படையில், போலீஸாா் கடந்த ஆண்டு பேரூராட்சியில் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது, பேரூராட்சியில் பல்வேறு பணிகளைச் செய்ததாக போலியான ரசீதுகளை தயாா் செய்து, ரூ.32.78 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் பேரூராட்சியின் முன்னாள் செயல் அலுவலா்கள் மணிகண்டன், உஷா கிரேசி, எலக்ட்ரீசியன் சத்தியமூா்த்தி, இளநிலை உதவியாளா்கள் திலீபன், காா்த்திக், பிள்ளையாா், எலக்ட்ரிக்கல் உதவியாளா் முருகேசன், போலி ரசீதுகள் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளா் வீரபாண்டி ஆகிய 8 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

கரூரில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ஆா்ப்பாட்டம் முன்னாள் அமைச்சா் உள்பட 800 போ் மீது வழக்குப் பதிவு
பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

கள்ளிமந்தையம் சாா் பதிவாளரிடம் ரூ.4.41 லட்சம் பறிமுதல்!

ரூ. 50 ஆயிரம் லஞ்சம்: காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை, உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

