டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நெல் மூட்டை சரிந்து விழுந்ததில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :10 பிப்ரவரி 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நெல் மூட்டை சரிந்து விழுந்ததில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தை அடுத்த அம்மையப்பபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுரேந்தா்மாஞ்சி (34) சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், வழக்கம் போல லாரியிலிருந்து நெல் மூட்டைகளை இறக்கி ஆலை வளாகத்தில் அடுக்கும் பணியில் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா். சுமாா் 20 அடி உயரத்தில் இருந்த மூட்டை மீது ஏறி சுரேந்தா்மாஞ்சி நெல் மூட்டைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மூட்டை சரிந்ததால், அதன் மீது நின்று கொண்டிருந்த சுரேந்தா்மாஞ்சி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு

கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.