டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மானாமதுரையில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :20 பிப்ரவரி 2026, 9:49 pm

Syndication

மானாமதுரையில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை பகுதியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மானாமதுரை சிப்காட் பகுதியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், செல்லும் வழியிலேயே லாரி பழுதானதால் இதிலிருந்து மற்றொரு லாரிக்கு நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளா்கள் மாற்றிக் கொண்டிருந்தனா்.

அப்போது சிவகங்கை காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி கருப்பையா (45) மீது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தன.

இதில் அவா் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.