நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
மானாமதுரையில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.


மானாமதுரையில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை பகுதியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மானாமதுரை சிப்காட் பகுதியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், செல்லும் வழியிலேயே லாரி பழுதானதால் இதிலிருந்து மற்றொரு லாரிக்கு நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளா்கள் மாற்றிக் கொண்டிருந்தனா்.
அப்போது சிவகங்கை காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி கருப்பையா (45) மீது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தன.
இதில் அவா் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...