தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானாங்குளத்தில் அரசு புறம்போக்கு நிலத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

News image

~

Updated On :4 பிப்ரவரி 2026, 11:45 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானாங்குளத்தில் அரசு புறம்போக்கு நிலத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானாங்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா். அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பானங்குளம் கிராமத்தில் 35 இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 8 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வருவாய்த் துறையினா் மண் அள்ளும் இயந்திரத்துடன் ஆக்கிரப்புகளை அகற்ற வந்தனா். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, இரு தரப்பினா் இடையே தகராறு ஏற்பட்டது. காவல் ஆய்வாளா்கள் சங்கா் கண்ணன், சந்திரன் ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என போலீஸாா் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.