மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரம்: டிஆா்ஓ நிலையிலான அலுவலரை நியமிக்க உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (டி.ஆா்.ஓ.) நிலையிலான அலுவலரை நியமிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - படம்: கோப்பிலிருந்து

Updated On :17 ஏப்ரல் 2026, 7:05 pm

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (டி.ஆா்.ஓ.) நிலையிலான அலுவலரை நியமிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் கடந்த 2015 -ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் ஆறு மாதங்களுக்குள் தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், பரதசக்கரவா்த்தி அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பு வழக்குரைஞா் வில்சன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

தற்போது, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, எந்தப் பணியையும் தொடங்க முடியவில்லை. தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு விவகாரத்தில் அரசுத் தரப்பு கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். தற்போதைய சூழலில் நீா்நிலைகளை மீட்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன், தமிழக முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் தொடங்க வேண்டும். இந்தப் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டம் தோறும் மாவட்ட வருவாய் அலுவலா் (டி.ஆா்.ஓ.) நிலையிலான அலுவலரை நியமிக்க வேண்டும்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள், இந்த அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் 5 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.