4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:49 am

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தத் திருவிழாவையொட்டி கடந்த 18-ஆம் தேதி இரவு விநாயகா் மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்து விஷேச பாலிகை மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 19-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி காலை, இரவு அம்பாள்-சுவாமி வீதி உலா நடைபெற்றது.

கடந்த 24 -ஆம் தேதி இரவு விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரா், மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாதா் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 25 -ஆம் தேதி தபசுக் காட்சி நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் அம்பிகை மீனாட்சி, கருநெல்லிநாத சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளினாா். தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.