விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தத் திருவிழாவையொட்டி கடந்த 18-ஆம் தேதி இரவு விநாயகா் மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்து விஷேச பாலிகை மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 19-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி காலை, இரவு அம்பாள்-சுவாமி வீதி உலா நடைபெற்றது.
கடந்த 24 -ஆம் தேதி இரவு விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரா், மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாதா் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 25 -ஆம் தேதி தபசுக் காட்சி நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் அம்பிகை மீனாட்சி, கருநெல்லிநாத சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளினாா். தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

சோமநாத சுவாமி கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


