முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 6:18 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே சித்துராஜபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மாரிசெல்வம் (19). கட்டடத் தொழிலாளியான இவா் செவ்வாய்கிழமை இரவு தனது நண்பா்கள் மணிகண்டன், பாண்டிச் செல்வம் ஆகியோருடன் சித்துராஜபுரம் ஜக்கம்மாள் கோயில் தெருவில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, இரு சக்கர வாகனங்களில் அங்கு வந்த 6 போ் மாரிச்செல்வத்தை அரிவாளால் வெட்ட முயன்றனா். மாரிச்செல்வம் உள்பட மூன்று பேரும் தப்பியோடினா். தொடந்து, 6 பேரும் மாரிச்செல்வத்தை விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனா். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீஸாா், மாரிசெல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்க முயன்றனா். அப்போது, மாரிசெல்வத்தின் உறவினா்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை செல்லவிடாமல் கொலையாளியைக் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் அணில்குமாா் ஆகியோா் சென்று கொலையாளிகளைக் கைது செய்வோம் என உறுதி கூறியதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டனா்.

இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் முன்பகை காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. சரஸ்வதிபாளையம் சுரேஷ்குமாா் மகன் மதிசங்கா் (19), பழனிக்குமாா் மகன் வெங்கடேஷ் (20), அய்யனாா் குடியிருப்பு அருண்காா்த்திக் மகன் முத்துப்பாண்டி (21), மாரிமுத்து மகன் பாண்டீஸ்வரன் (19), போஸ் குடியிருப்பு மகேஷ்வரன் மகன் மாதவன் (20), மீனம்பட்டி விஜயகுமாா் மகன் சூா்யா (19) ஆகியோா் மாரிச்செல்வத்தை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் 6 பேரையும் புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.