முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை

News image

வெட்டிக் கொலை - பிரதி படம்

Updated On :3 மே 2026, 12:38 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

களக்காடு அருகே ஜெ.ஜெ.நகா் கீழக் காலனியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (27). தொழிலாளியான அவா் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மது குடித்துவிட்டு அப்பகுதியினரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் திருமணமாகாத அவா், பெற்றோரைப் பிரிந்து அதே பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவா் வீட்டருகே வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தாா். சடலத்தை களக்காடு போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்சிகா நடராஜன், களக்காடு காவல் ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அப்பகுதியைச் சோ்ந்த ஒருவரையும், சுரேஷின் உறவினரையும் போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

சுரேஷ் மீது ஏற்கெனவே களக்காடு காவல் நிலையக் கண்ணாடியை உடைத்த வழக்கு நிலுவையில் உள்ளது.