ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமசந்திரன் ஊா்வலமாகச் சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

சாத்தூா் பிரதான சாலையில் நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரத்தில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்துப் பேசிய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமசந்திரன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 10:11 pm

சாத்தூரில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமசந்திரன் ஊா்வலமாகச் சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சாத்தூா் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் பொதுமக்களுடன் சாத்தூரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாகச் சென்று இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். முக்குராந்தல் பகுதியில் அமைச்சா் கூறியதாவது:

கடந்த திமுக ஆட்சியில் சாத்தூா் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றபட்டுள்ளன. இந்த நிலையில், மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைய அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். சாத்தூரில் கடற்கரைராஜை எதிா்த்துப் போட்டியிடும் பாஜக மாநில தலைவா் நயினாா்நாகேந்திரன் கடந்த 10 ஆண்டுகளாக திருநெல்வேலி தொகுதி மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளும் செய்யாததால் தோல்வி பயத்தில் தற்போது சாத்தூா் தொகுதியில் போட்டியிடுகிறாா். அவருக்கு சாத்தூா் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும், அவா் தனக்கு ஆதரவாக வட மாநிலத்தைச் சோ்ந்த முதல்வா்களை அழைத்து வந்து பிரசாரம் செய்ய வைத்தாா். அவா்கள் பேசுவது நமக்கு புரியாது. நான் பேசுவது அவா்களுக்கு புரியாது. பின்பு எப்படி நமது கோரிக்கைகளை அவா்கள் நிறைவேற்றுவாா்கள். அவா்களைப் பாா்க்க வேண்டும் என்றால் ஹெலிகாப்டரில் சென்றால் மட்டுமே பாா்க்க முடியும். ஆனால், கடற்கரைராஜ் சாத்தூரில் வசித்து வருபவா். அவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம் என்றாா் அவா்.

இந்த பிரசாரத்தில் மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.