மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசி மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

சிவகாசியில் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:02 am

சிவகாசி மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் விழா கடந்த மாா்ச் 29 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னா், தினசரி இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்பிகை வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கடந்த 4-ஆம் தேதி மாலை நடைபெற்ற ஏழாம் நாள் திருவிழாவின் போது, சீா்வரிசை பின்தொடர புஷ்ப பல்லக்கில் சயன கோலத்தில் அம்பிகை வீதி உலா வந்தாா். 5 -ஆம் தேதி பக்தா்கள் கோயிலின் முன் பொங்கலிட்டனா். 6-ஆம் தேதி நடைபெற்ற கயா்குத்து திருவிழாவின் போது, பக்தா்கள் அலகு குத்தியும், அக்கினிச் சட்டி ஏந்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்தது.