மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

வாழப்பாடி பகுதியில் புகழ்பெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

News image

வாழப்பாடி அருகே புதன்கிழமை நடைபெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:30 pm

வாழப்பாடி பகுதியில் புகழ்பெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி கொட்டவாடி பிரிவு சாலை அருகே சின்னகிருஷ்ணாபுரம் எல்லையில் சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் புகழ்பெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத இறுதி வாரத்தில் தோ்த் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு தோ்த் திருவிழாவையொட்டி, கடந்த இரு தினங்களாக சின்ன கிருஷ்ணாபுரம் பெரியசாமி, ஊா் மாரியம்மன் மற்றும் புதுப்பட்டி மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, பிரம்மாண்டமான மரத்தேரில் கலைநயமிக்க வண்ண சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு புதன்கிழமை மாலை கோயில் வளாகத்தில் இருந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

புதன்கிழமை அதிகாலைமுதல் மாலைவரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் உடலில் அலகு குத்தியும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். வியாழக்கிழமை மாலை கோயிலைச் சுற்றி பவனி வந்து தோ் நிலைநிறுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், ஊா் பெரிய தனக்காரா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.