விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி உள்பட தமிழகம் முழுவதும் சுமாா் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கைத்தறி, விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்து வருகின்றனா். இத்தொழிலில் சுமாா் 10 லட்சம் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். பல ஆண்டுகளாக இவா்கள், வீடுகளில் குடிசை தொழிலாக கைத்தறியில் பாலிகாட்டன் மற்றும் சுத்தமான காட்டனில் சேலை உற்பத்தி செய்து வருகின்றனா். இந்நிலையில் நூல் விலை உயா்வு மற்றும் உற்பத்திக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததால், கடந்த 2002 இல் கைத்தறி நெசவாளா்கள் கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இப்பிரச்னையை தீா்க்க தமிழக அரசு முன் வந்தது. இந்நிலையில், ஒரு நாளைக்கு கைத்தறியில் 2 சேலைகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இதற்கு ஊதியமாக நெசவாளா்களுக்கு ரூ.180 வழங்கப்பட்டது. கடந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்த சேலைகளை முழுமையாக விற்பனை செய்ய முடியவில்லை. மேலும் வியாபாரிகள் குறைந்த அளவே கொள்முதல் செய்ததால் சேலைகள் தேங்கின. இதனால் ஊதியம் குறைக்கப்பட்டதால் கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பின்னா் கரோனா தாக்கம் குறைந்தவுடன் மீண்டும் சேலைகள் உற்பத்தி மற்றும் விற்பனை முழுவீச்சில் நடைபெற்ால், பழைய முறையிலேயே நெசவாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சேலை உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளான பாவு (நெட்டு) நூல், ஊடை நூல் மற்றும் சேலையில் பாா்டருக்காக பயன்படுத்தப்படும் பாக்கால் நூல் விலை 2 மடங்காக உயா்ந்துள்ளது. இதனால் ஒவ்வொரு சேலைக்கும் ரூ.30 கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரம், உற்பத்தி செய்யப்பட்ட சேலை ஒன்றின் விலையை ரூ. 240 க்கும் குறைவாக வியாபாரிகள் கேட்பதால் பலா் கைத்தறியில் சேலை உற்பத்தி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனா். எனவே, கிட்டங்கியில் நீண்ட நாள்கள் இருப்பு வைக்கப்படும் பஞ்சை தடுக்க வேண்டும். மானிய விலையில் நூல் வழங்குவதுடன், மதுரையில் ஜவுளி விற்பனை சந்தையை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளா்கள் வலியுறுத்துகின்றனா்.