மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரியாபட்டியில் சுகாதார விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தேசிய குடிநீர், சுகாதார விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :22 மார்ச் 2015, 6:56 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தேசிய குடிநீர், சுகாதார விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியக் குழு தலைவர் முத்துலெட்சுமி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். குடிநீரை சேமிப்பது, பாதுகாக்கப்பட்ட குடிநீரை உபயோகிப்பது மற்றும் சுகாதார விழிப்புணர்வு பற்றிய வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பள்ளி மாணவர்கள் பேரணியில் ஏந்திச் சென்றனர். குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் மீனாட்சிசுந்தரம், உதவி பொறியாளர் மணிமாறன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.