/

கல்குறிச்சியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

மல்லாங்கிணறு அருகேயுள்ள கல்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி பசுமைப் படை சார்பில் மரம் வளர்த்தல், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:55 am

கல்யாணி வெங்கடராமன்

மல்லாங்கிணறு அருகேயுள்ள கல்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி பசுமைப் படை சார்பில் மரம் வளர்த்தல், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, உடற்கல்வி ஆசிரியர் பிச்சை தலைமை வகித்தார். பசுமைப் படை பொறுப்பாளர் செல்வி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்து பேசினார்.

பள்ளி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.