மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரியாபட்டி அருகே பயிர்கள் எரிந்து சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

காரியாபட்டி அருகே விளைந்த பயிர்கள் தீ விபத்தில் சேதமடைந்ததால் விவசாயிகள், இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :25 பிப்ரவரி 2015, 6:55 pm

காரியாபட்டி அருகே விளைந்த பயிர்கள் தீ விபத்தில் சேதமடைந்ததால் விவசாயிகள், இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரியாபட்டி அருகேயுள்ள கரியனேந்தல் விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் துவரை, பாசிப்பயறு, உளுந்து, சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்திருந்தனர். போதிய மழை இல்லாததால், எதிர்பார்த்த விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் பாதிப்படைந்தனர். பாதி விளைந்ததும் விளையாத துவரை செடிகளை விவசாயிகள் அறுவடை செய்து பிரித்தெடுத்து, காட்டிலேயே களம் அமைத்திருந்தனர். திங்களன்று இரவு திடீரென அறுவடை செய்து வைத்திருந்த துவரை செடிகள் தீப்பற்றி எரிந்தது. தீ பரவியதில் அறுவடை செய்யாமல் இருந்த துவரை, உளுந்து, மொச்சை செடிகளும் தீயில் கருகி சேதமாயின. பல ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட பயிர்கள் தீயில் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்கவேண்டுமென விவசாயிகள் சங்க தலைவர் குமார் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.