நரிக்குடி அருகேயுள்ள ஏ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
ஏ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூம்பிடாகை, கல்விமடை, கருவக்குடி, புல்வாய்க்கரை, பிள்ளையார்குளம், அழகாபுரி, நேர்த்தியாயிருப்பு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும் வெளி நோயாளிகளாக 200 பேர் வரை வருகின்றனர். உள்நோயாளிகளாக 10 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது ஒரு மருத்துவர் மட்டுமே பணிபுரிகிறார். அதிகமானோர் ஒரே நேரத்தில் வருவதால் அவர் சிகிச்சை அளிக்க சிரமப்பட வேண்டியுள்ளது. இரவில் தற்கொலை முயற்சி, விபத்துகள், பெண்களுக்கு பிரசவ வலி சமயங்களில் சிகிச்சை அளிக்க இயலவில்லை.
இரவில் மருத்துவர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
எனவே இங்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து அவர்கள் இரவிலும் தங்கிப் பணிபுரிய வசதி செய்துதர வேண்டும் என சுற்றுப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திலக் அதிரடி, அஸ்வினி அசத்தல்; மும்பை அபாரம்!
இன்டர் காசியை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி!

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

