பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:03 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இப் பேரணியை விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் வசந்தராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர்கள் திருச்சுழியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று பூமிநாதர் கோவில் வரை வாக்காளர் சேர்க்கை வாசகங்களை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்தில் வட்டாட்சியர் ரெங்கநாதன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ஷாஜஹான், மண்டல துணை வட்டாட்சியர் பாண்டிசங்கர் ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வல முடிவுற்ற பின்னர் வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தத்தின்போது பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறுவதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.