பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கண்மாயில் மூழ்கி ஒருவர் சாவு

காரியாபட்டி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சி சீகனேந்தலில் மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மர அறுவை மில் வைத்துள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:02 am

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சி சீகனேந்தலில் மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மர அறுவை மில் வைத்துள்ளார்.

இந்த மில்லை தனது தம்பி லட்சுமி நாராயணன் என்ற பரசுராமன் (45) பொறுப்பில் ஒப்படைத்திருந்தார். இதனால், வேலையும் பார்த்துக் கொண்டு அங்கேயே பரசுராமன் தங்கி இருந்தாராம். செவ்வாய்க்கிழமை அருகேயுள்ள கண்மாயில் அவர் குளிக்கச் சென்றாராம். அங்கு குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆவியூர் சப்- இன்ஸ்பெக்டர் வீரணன், உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.