கால்வாய்கள் அனைத்தும் மண்மூடி உள்ளதால் கண்மாய்க்கு செல்ல வேண்டிய மழைநீர் விவசாய நிலங்களில் சூழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் சரியாக மழை பெய்யவில்லை. இந்த ஆண்டு கடந்த மாதமே இப்பகுதி விவசாயிகள் கம்பு, சோளம், கேப்பை, மக்காசோளம், பருத்தி, மல்லி போன்ற பயிர்களை பயிர் செய்தனர். கடந்த 1 வாரமாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் பயிர் செய்த விளை நிலங்களில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயிர்கள் அனைத்தும் அழுகி நாசமாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றுவதுடன் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மழைநீரால் பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.