திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காரியாபட்டி அருகே லாரி கடத்தல்

காரியாபட்டி அருகே கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:18 am

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி அருகே கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

   இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தருமபுரியைச் சேர்ந்தவர் விமலன் (35). லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரான இவர் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிகொண்டு சென்றார். காரியாபட்டி அருகே கள்ளிக்குடி விலக்கு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் விமலனை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1400-ஐ பறித்துக்கொண்டதோடு லாரியையும் கடத்திச் சென்றனர்.

   இதுகுறித்து விமலன் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் எம். இலுப்பைகுளத்தைச் சேர்ந்த கணேசன் (40), மற்றும் ராமகிருஷ்ணன் (52) ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது லாரியை கடத்தியது அவர்கள் தான் என்பது தெரியவந்தது.

  இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். லாரியுடன் தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.