காரியாபட்டி அருகே கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தருமபுரியைச் சேர்ந்தவர் விமலன் (35). லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரான இவர் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிகொண்டு சென்றார். காரியாபட்டி அருகே கள்ளிக்குடி விலக்கு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் விமலனை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1400-ஐ பறித்துக்கொண்டதோடு லாரியையும் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து விமலன் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் எம். இலுப்பைகுளத்தைச் சேர்ந்த கணேசன் (40), மற்றும் ராமகிருஷ்ணன் (52) ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது லாரியை கடத்தியது அவர்கள் தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். லாரியுடன் தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

