திருச்சுழி பகுதியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலம் நடைபெற்ற ஆய்வு முகாமில் விவசாயிகள் பங்கேற்றனர்.
திருச்சுழி பகுதியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலம் மண்ணாய்வு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. மண்டபசாலை, எம்.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் நேரடி மண்ணாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் மற்றும் தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்வதற்கு மண் மாதிரிகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மண் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் எம்.ரெட்டியபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் விரிவாக விளக்கினார். மண் பரிசோதனை செய்வதன் மூலம் தங்களது நிலத்தின் தன்மை மற்றும் சத்துக்கள் பற்றியும், மண்ணில் உள்ள பிரச்னைகள் குறித்தும், வயலில் இடவேண்டிய பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட உரங்கள் குறித்தும், நில சீர்திருத்தங்கள் குறித்தும், நிலத்திற்கேற்ற பயிர் சாகுபடி குறித்தும் தெரிந்து கொள்ளலாம். வேளாண்மை மாதிரிகளும் தோட்டக்கலைத்துறை மூலம் 135 மண் மாதிரிகளும் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு மண் வள அட்டை மூலம் விவசாயிகளுக்கு ஆய்வு முடிவுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

