திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நரிக்குடியிலிருந்து மானாமதுரைக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி தர்மம், தேளி வழியாக மானாமதுரைக்கு, கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:13 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி தர்மம், தேளி வழியாக மானாமதுரைக்கு, கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக நரிக்குடி வட்டார மாணவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நரிக்குடி பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் தினமும் 8 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ளும் நிலையில் உள்ளனர். மணிக்கட்டியேந்தல், மறையூர், தர்மம், தேளி, கொட்டக்காச்சியேந்தல் கிராமங்களிலிருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், நரிக்குடியில் படிக்கின்றனர். மேலும், இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் நரிக்குடி வந்து, பிற நகரங்களுக்கு செல்கின்றனர். ஆனால், பள்ளி கல்லூரி செல்ல உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லை. தேளி, தர்மம் வழியில், காலை 6 மணிக்கே பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தில் மாணவர்கள் செல்ல முடியாது. இதே போல், மாலையில் 4 மணிக்கு நரிக்குடியில் இருந்து அரசுப் பேருந்து கிளம்பி விடுகிறது. பள்ளி முடிய 4.30 மணியாகிறது. இருவேளையுமே, மாணவர்கள் 8 கி.மீ. வரை நடக்கின்றனர். இதனால், அரசு இலவச பேருந்து பாஸ் வழங்கியும் பயனில்லை.

நரிக்குடியிலிருந்து தர்மம், தேளி வழியாக, மானாமதுரைக்கு 22 கி.மீ. ஆகும். இந்த வழித்தடத்தில், மறையூர், தர்மம், தேளி உட்பட 15-க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவ்வழியே 2 முறை மட்டுமே இயக்கப்படுகிற பேருந்தால் எந்தப் பயனுமில்லை. வேலைக்கு சென்று வரும் மக்கள், குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்ல முடியாமல், அவதிப்படுகின்றனர். நரிக்குடியிலிருந்து தேளி வழியாக 10 ரூபாய் செலவில், 22 கி.மீ. தூரத்தில் மானாமதுரை செல்வதற்குப் பதில், பேருந்து வசதி இல்லாத காரணத்தால், பார்த்திபனூர் வழியாக 20 ரூபாய் செலவில், 32 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பணம் செலவாவதுடன் நேரமும் அதிகமாகிறது. மாணவர்களுக்கு பயன் ஏற்படும் வகையில், காலை மற்றும் மாலையில், பள்ளி நேரத்திற்கு ஏற்ப பேருந்துகளை இயக்கவேண்டும். வருகிற கல்வியாண்டிலாவது, பள்ளி நேரத்துக்கு பேருந்து வருமா என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதே நேரத்தில் அனைவரும் பயனடையும் வகையில், நரிக்குடியிலிருந்து தேளி வழியாக மானாமதுரைக்கு, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.