திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

"புதிய கட்டடத்தில் சந்தை செயல்பட வேண்டும்'

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள கட்டனூரில் செயல்படும் வாரச்சந்தை அதற்குரிய கட்டடத்தில் செயல்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:09 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள கட்டனூரில் செயல்படும் வாரச்சந்தை அதற்குரிய கட்டடத்தில் செயல்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் சார்பில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜா, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கட்டனூரில் வாரம் ஒருமுறை சந்தை நடைபெறும்.

நாலூர், அழகாபுரி, ஏ.முக்குளம், கருவக்குடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, பொதுமக்கள், வியாபாரிகள் சந்தைக்கு வருகின்றனர். இதற்காக ஊரில், 2006இல் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளாக அங்கு சந்தை நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக ஊராட்சி துவக்கப்பள்ளி அருகே, இடநெருக்கடியில், சந்தை நடைபெற்று வருகிறது. ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் இருப்பிடமாக சந்தை உள்ளது.

இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே, வாரச் சந்தைக்கு என கட்டப்பட்ட இடத்தில், அது முறையாக செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.