லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On :13 ஜூன் 2014, 6:39 pm

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் ஒவ்வொரு பகுதிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கண்மாயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், மிதவை உதவியுடன், கயிறு கட்டி மீட்பது எப்படி, முதலுதவி அளிப்பது குறித்தும் செயல் விளக்கத்துடன் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

பொதுமக்களின் சந்தேகங்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மாரிமுத்து மற்றும் குழுவினர் விளக்கமளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.