எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:35 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் ஒவ்வொரு பகுதிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கண்மாயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், மிதவை உதவியுடன், கயிறு கட்டி மீட்பது எப்படி, முதலுதவி அளிப்பது குறித்தும் செயல் விளக்கத்துடன் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

பொதுமக்களின் சந்தேகங்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மாரிமுத்து மற்றும் குழுவினர் விளக்கமளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.