காரியாபட்டி அருகேயுள்ள கீழஉப்பிலிகுண்டு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானத்தையொட்டி நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் செல்கிறது. இதன் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. நாளடைவில் பாலம் சேதமடைந்து மேல் பரப்பில் உள்ள கான்கிரீட் முற்றிலும் விழுந்துவிட்டது. தற்போது தூண்கள் மட்டும் நிற்கின்றன. இதனால், அக்கிராமத்தில் யாராவது இறந்தால் சடலத்துடன் கால்வாய்க்குள் இறங்கி மயானத்திற்குச் செல்லவேண்டியுள்ளது.
கால்வாயில் தண்ணீர் வந்தால் பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டும். கால்வாய் குறுக்கே புதிய பாலம் அமைக்க நான்கு ஆண்டுகளாக கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கிராமத்தினர் மறியல் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து, வட்டாட்சியர் பொன்ராமர், பி.டி.ஓ. முத்துலெட்சுமி, துணை பி.டி.ஓ., பத்மினி உள்ளிட்ட அதிகாரிகள் பாலத்தைப் பார்வையிட்டனர். ஆட்சியரிடம் அனுமதி பெற்று விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் போராட்ட முடிவை கைவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

