திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செல்வ காளியம்மன் கோயில் பொங்கல் விழா

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டி செல்வ காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்தனர். திருவிழாவின் முக்கிய

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:58 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டி செல்வ காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தீச்சட்டி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முத்துப்பாண்டி என்ற பக்தர் அம்மனுக்கு 101 தீச்சட்டி ஏந்தி பூக்குழி இறங்கினார். அதே போல் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து பூக்குழி இறங்கினர்.

 500-க்கும் அதிகமான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை செல்வ காளியம்மன் கோயில் நிர்வாகக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.