விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த அரசுப் பணியாளராக தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் காமராஜுக்கு செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விருது வழங்கினார். பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவராக பதவி வகித்த அ.காமராஜ் விருதுநகர் மாவட்ட அரசுப் பணியாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக சிறந்த அரசுப் பணியாளர் விருது அ.காமராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.