தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பருவமழை பொய்த்ததால் கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன் பகுதிகளில் பருவமழை பொய்த்து போனதால் பயிர்கள் கருகி விட்டதால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள்

Updated On :20 அக்டோபர் 2013, 7:35 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன் பகுதிகளில் பருவமழை பொய்த்து போனதால் பயிர்கள் கருகி விட்டதால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

  காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, இலுப்பையூர், விடத்தகுளம், மேலேந்தல், ஒட்டங்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பருவமழையை நம்பி தங்கள் நிலங்களை செம்மைப்படுத்தி வைத்திருந்தனர்.

  பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நெல் மற்றும் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். ஆனால், பருவமழை பொய்த்து விட்டது. இதனால், பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன.

 இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழை பொய்த்ததால், விடத்தகுளம், புதூர் ஆகிய கிராமங்களுக்கும் இடையை பொதுவான கண்மாய் வறண்டு மைதானமாக காட்சியளிக்கிறது. இந்த கண்மாய் தண்ணீரை நம்பி சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிரும் கருகி வருவது விவசாயிகளுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

 இதுபற்றி திருச்சுழி விவசாய சங்கத் தலைவர் தனபாலன் கூறுகையில், திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் பருவமழையை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை செம்மைப்படுத்தி நிலக்கடலை, நெல் பயிரிட்டோம். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாததால் பயிர்கள் முற்றிலும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் விவசாயிகள் அனைவரும் கிராமத்தை காலி செய்து நகரங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

 எனவே இப்பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.