மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கல்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், வட்டார மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர்


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், வட்டார மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் காந்திமதி தலைமை வகித்தார். மனுநூல் நிலைய நிறுவனர் பரதன் முன்னிலை வகித்தார். மதுரை தியாகம் பெண்கள் அறக்கட்டளை நிறுவனர் அமுதசாந்தி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர் நலச்சங்க செயலாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் சரத்பாபு, மனுடிரஸ்ட் செயலாளர் கருப்பணன், சமத்துவ மக்கள் மன்றத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினார்கள். சங்கத் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சதுரகிரி, பொருளாளர் ரவி மற்றும் உறுப்பினர்கள் மோகன், முத்துமணி, பாண்டி, சித்ராதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகள் 250 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...