டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கல்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், வட்டார மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:46 pm

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், வட்டார மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் காந்திமதி தலைமை வகித்தார். மனுநூல் நிலைய நிறுவனர் பரதன் முன்னிலை வகித்தார். மதுரை தியாகம் பெண்கள் அறக்கட்டளை நிறுவனர் அமுதசாந்தி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர் நலச்சங்க செயலாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் சரத்பாபு, மனுடிரஸ்ட் செயலாளர் கருப்பணன், சமத்துவ மக்கள் மன்றத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினார்கள். சங்கத் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சதுரகிரி, பொருளாளர் ரவி மற்றும் உறுப்பினர்கள் மோகன், முத்துமணி, பாண்டி, சித்ராதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகள் 250 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.