டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க காரியாபட்டி வட்டக் கிளை சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னையில் மீண்டும் பணி வழங்கக்

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:43 pm

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க காரியாபட்டி வட்டக் கிளை சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னையில் மீண்டும் பணி வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்ட சாலைப் பணியாளர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக் கிளைத் தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

 ஊரக வளர்ச்சித் துறை சங்க மாவட்டச் செயலர் கதிரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, ஆணையாளர் கண்ணன் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க காரியாபட்டி வட்ட செயலர் சீராளன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.