எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருச்சுழி பகுதியில் மர்மக் காய்ச்சல்

திருச்சுழியில் மர்மக் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:49 am

கல்யாணி வெங்கடராமன்

திருச்சுழியில் மர்மக் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

   திருச்சுழி கிழக்குத் தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது. பல இடங்களில் கழிவுநீர் தேங்கி சுற்றுசூழல் பாதித்துள்ளது.

    கடந்த சில நாள்களில் இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதுகுறித்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராதா கூறுகையில்: கழிவுநீர் தேங்கி நிற்பதால் தான் காய்ச்சல் பரவியுள்ளது.

   ஊராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியில் கால்வாய் அமைத்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.