லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருச்சுழி பகுதியில் மர்மக் காய்ச்சல்

திருச்சுழியில் மர்மக் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

Updated On :19 மே 2013, 6:37 pm

திருச்சுழியில் மர்மக் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

   திருச்சுழி கிழக்குத் தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது. பல இடங்களில் கழிவுநீர் தேங்கி சுற்றுசூழல் பாதித்துள்ளது.

    கடந்த சில நாள்களில் இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதுகுறித்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராதா கூறுகையில்: கழிவுநீர் தேங்கி நிற்பதால் தான் காய்ச்சல் பரவியுள்ளது.

   ஊராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியில் கால்வாய் அமைத்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.