காரியாபட்டி அருகே மர்ம காய்ச்சல்: 100-க்கும் மேற்பட்டோர் அவதி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ளது டி.கடம்பங்குளம். இந்த கிராமத்தில் கடந்த 2 வாரகாலமாக மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கை,கால் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். பெரியவர்களுக்கு கை, கால் வீங்கி காணப்படுகிறது.









