எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காரியாபட்டி அருகே மர்ம காய்ச்சல்: 100-க்கும் மேற்பட்டோர் அவதி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ளது டி.கடம்பங்குளம். இந்த கிராமத்தில் கடந்த 2 வாரகாலமாக மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கை,கால் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். பெரியவர்களுக்கு கை, கால் வீங்கி காணப்படுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:56 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ளது டி.கடம்பங்குளம். இந்த கிராமத்தில் கடந்த 2 வாரகாலமாக மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கை,கால் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். பெரியவர்களுக்கு கை, கால் வீங்கி காணப்படுகிறது.

20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த மர்ம காய்ச்சல் பாதிப்பால் தேர்வு எழுத இயலவில்லை. 100-க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் குறையாததால் மக்கள் அச்ச உணர்வில் உள்ளனர். மருத்துவ குழுவினர் அக்கிராமத்தில் முகாமிட்டு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட  நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.