லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் போலீஸார் பற்றாக்குறை

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் போலீஸார் பற்றாக்குறையால் சட்டம் ஒழுங்குப் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் போலீஸார் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

Updated On :29 ஜூன் 2013, 6:50 pm

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் போலீஸார் பற்றாக்குறையால் சட்டம் ஒழுங்குப் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் போலீஸார் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

 சுமார் 20 கி.மீ. சுற்றளவில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது மல்லாங்கிணர் காவல் நிலையம். இது துவங்கப்பட்டபோது 30 காவலர்கள் பணிபுரிந்து  வந்தனர். இங்கிருந்து மாற்றலாகிச் செல்லும் காவலர்களுக்கு பதில் புதிதாக போலீஸார் நியமனம் செய்யப்படாததால் தற்போது சார்பு ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்பட 10 போலீஸார் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.  ஆய்வாளர் அலுவலகம், துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், மதுரை நீதிமன்றம், விருதுநகர் நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் என தினமும் 5 போலீஸார் வெளியில் சென்று விடுவதால், மீதமுள்ள 5 போலீஸார்தான் காவல் நிலையத்தில் உள்ளனர்.

 இதனால், கிராமங்களில் நடக்கும் பொங்கல், திருவிழா, அரசியல் கட்சிக்  கூட்டங்களுக்கு போலீஸாரால் போதிய பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. ஆகவே இந்த காவல் நிலையத்துக்கு போதுமான காவலர்களை நியமிக்க மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.