திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகர் அருகே அம்மா திட்ட முகாம்: வட்ட வழங்கல் அலுவலர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்   

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் வி.சொக்கலிங்காபுரம் ஊராட்சியைச் சேர்ந்த  பெத்தலுப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் அம்மா திட்ட முகாமில்   வட்ட வழங்கல் அலுவலர் நாகேஸ்வரி,

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:29 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பொதுமக்களைத் தேடி வருவாய் திட்டம் என்ற அம்மா திட்ட முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் வி.சொக்கலிங்காபுரம் ஊராட்சியைச் சேர்ந்த  பெத்தலுப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் அம்மா திட்ட முகாமில்   வட்ட வழங்கல் அலுவலர் நாகேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் பல்வேறு நலத்திட்டம் சம்பந்தமான மனுக்களை பெற்றனர். இதில், மொத்தம் 416 மனுக்கள் பெறப்பட்டு, 136 மனுக்களுக்கு  உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் அனைத்தும் பல்வேறு துறைகளுக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாமில் வி.சொக்கலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன்,  ஜமீன்சல்வார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.