விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தின் கீழ், நகர் மற்றும் பாலையம்பட்டி ஊராட்சி பகுதிகள் அடங்கும். அருப்புக்கோட்டை நகரின் விரிவாக்கப் பகுதிகளும் இந்த காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இந்த காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 80 போலீசார் பணியில் இருக்கவேண்டும். ஆனால் தற்போது 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.-க்கள், 11 சிறப்பு எஸ்.ஐ.-க்கள் தலைமைக் காவலர்கள் 14 பேர், முதன்மை காவலர்கள் 21 பேர், போலீசார் 2 பேர் என மொத்தம் 52 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். நகரில் எல்லை வேகமாக விரிவடைந்து வருவதால், குறைந்த எண்ணிக்கையிலான போலீசார், பணிச்சுமையால் வழக்கு விசாரணையிலும் தேக்கம் ஏற்படுகிறது.