திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மல்லாங்கிணர் நாகம்மாள் கோவில் பொங்கல் விழா

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வி.வி.வி. நகரிலுள்ள நாகம்மாள் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 48 நாள்களுக்கு முன்பு  கொடியேற்றத்துடன் துவங்கியது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:45 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வி.வி.வி. நகரிலுள்ள நாகம்மாள் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 48 நாள்களுக்கு முன்பு  கொடியேற்றத்துடன் துவங்கியது.

 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 500 பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடைபெற்றது. சிவனடியார் முத்துசாமி, குழுவினரின் ஆன்மீக சொற்பொழிவு, மதுரைகண்ணன், பாடகர் சௌந்திரபாண்டி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி, நாடகம், வில்லுப்பாட்டு, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றன.

 ஏராளமான பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். திருவிழாவில் நடைபெற்ற அன்னதானத்தில் 30-க்கும் மேற்பட்ட  கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.