மேலும், இதுபோன்ற முகாம்களில் பங்கு பெற்றும் இருப்பது அவசியம் ஆகும். இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தற்போது பயின்று வரும் பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் அனுமதி பெற்று முதல்வர், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இந்த விண்ணப்பங்களை www.vhnsc.edu.in என்ற இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.இராமனிடம் தொலைபேசி எண்-9245165958 தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். அதோடு, பங்கேற்கிறவர்களுக்கு மத்திய அரசு அறிவியல் தொழில் நுட்ப துறையின் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் பயிற்சி அளிக்க இருப்பதாகவும் முதல்வர் சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.