இங்கு, பல ஆண்டுகளாக காப்பாளர்கள், சமையலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. 47 சமையலர்களுக்கு 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. 47 காப்பாளர்களில், 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோக, அனுமதிக்கப்பட்ட விடுதிகளில், 13 காவலர்கள் பணியிடங்கள், 3 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்வர் உத்தரவின்படி, காப்பாளர், சமையலர், காப்பாளிகளுக்கு நேர்முகத் தேர்வு நடந்தது. தேர்வு நடந்து 2 மாதங்களுக்கு மேலாகியும், யாரும் பணி நியமனம் செய்யப்படவில்லை. வேலைப் பளு காரணமாக, குறித்த நேரத்தில், மாணவர்களுக்கு உணவு வழங்க, தாமதம் ஏற்படுகிறது.