எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சத்துணவு ஊழியர் சங்க மாநாடு

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அருப்புக்கோட்டை கிளையின் 12-ஆவது மாநாடு, மெக்கா தொடக்கப் பள்ளியில் கிளைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:31 am

கல்யாணி வெங்கடராமன்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அருப்புக்கோட்டை கிளையின் 12-ஆவது மாநாடு, மெக்கா தொடக்கப் பள்ளியில் கிளைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

   அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் உலகநாதன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். கிளைச் செயலாளர் ராஜாராம் அறிக்கை வாசித்தார். அரசு ஊழியர் சங்கம் பொன்ராஜ், ராமராஜ், வருவாய் அலுவலர் சங்கம் ராமநாதன், வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கம் மாயமாலை ஆகியோர் வாழ்த்தினர்.

   சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனியசாமி, பொருளாளர் சுப்புக்காளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக நாகஜோதி, செயலாளராக சோலைச்சாமி, பொருளாளராக சேஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

   மாவட்டச் செயலாளர் அய்யம்மாள் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாநாட்டில் 150 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.