முஸ்லீம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹூம்ஷா தலைமை வகித்தார். இதில், தமிழகத்தில்


மத்திய, மாநில அரசுகளின் சார்பில் முஸ்லீம்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹூம்ஷா தலைமை வகித்தார். இதில், தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு 10 சதவீதம் கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்திய அளவில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமுல்படுத்த வேண்டும். நீண்டகாலமாக தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு சிறையில் வாடிவருகின்றவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...