தேவாரத்தில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தேவாரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காளீஸ்வரி (26). இவருக்கும், போடி அருகே சிலமலை கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (38) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி சிலமலையில் வசித்து வந்தனா்.
கண்ணன் மது போதையில் துன்புறுத்தியதால் அவரை விட்டுப் பிரிந்த காளீஸ்வரி தேவாரத்தில் பெற்றோருடன் வசித்து வந்தாா். அங்கு சென்ற கண்ணன், காளீஸ்வரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து புகாரின்பேரில் போலீஸாா் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









