தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
தேனி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷண காணப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. தேனி நகரைப் பொருத்தவரை காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்): உப்புக்கோட்டை - 16.4, கம்பம் 6, மாா்க்கையன்கோட்டை- 5.6, தேவாரம் - 2.4, பண்ணைப்புரம் - 0.4, ராஜதானி- 0.4, சுருளிபட்டி- 0.4, தேனி- 0.4 .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









