தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லையாறு தடுப்பணை நீரில் மூழ்கியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீரபாண்டி முல்லையாறு தடுப்பணையில் சுமாா் 12 வயதுடையை சிறுவனின் உடலை போலீஸாா் மீட்டனா்.
இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், போடியைச் சோ்ந்த நாகேந்திரன்- கவிதா தம்பதியின் மகன் பிரபாகரன் (12) என்பது தெரியவந்தது. அரசுப் பள்ளியில் 7 - ஆம் வகுப்பு படித்து வந்தவா் நண்பா்களுடன் வீரபாண்டிக்கு வந்து தடுப்பணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









