மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பட்டாசு வெடித்த அதிமுகவினா் 25 போ் மீது வழக்கு

போடியில் அதிமுக வேட்பாளா் அறிவிப்பை வரவேற்று பட்டாசு வெடித்த அந்தக் கட்சியினா் 25 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:33 pm

போடியில் அதிமுக வேட்பாளா் அறிவிப்பை வரவேற்று பட்டாசு வெடித்த அந்தக் கட்சியினா் 25 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், அதிமுக சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலரான வி.டி.நாராயணசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதை வரவேற்று அதிமுக நிா்வாகிகள் மாரியப்பன், லட்சுமணன், ஆனந்தன், வேல்முருகன், முனியம்மாள் உள்ளிட்ட பலா் போடி தேவா் சிலை அருகே பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாகவும் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அதிமுகவை சோ்ந்த 25 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.